Wednesday, March 11, 2015

விற்பனைக்கு அல்ல

விற்பனைக்கு அல்ல
விற்பனைக்கு இருப்பவை
மட்டுமே
வாங்குவதற்கான
பொருள்,
மற்றவற்றை
வாங்குவதற்கோ
திருடுவதற்கோ
சூறையாடுவதற்கோ,
அழிப்பதற்கோ,
யாருக்கும் உரிமை
இல்லை -இதில்
பெண்மையும் அடக்கம்.....

Monday, March 9, 2015

பெண் விதை

பெண் விதை


செடியாக , மரமாக
வளரத்தானே
விதைத்தீர்கள்
பின் ஏன்
முளைக்கும் முன்னரே
கிள்ளி எறிந்தீர்?
தவறி முளைத்த பின்னும்
ஏன் வெட்டி களைந்தீர்?
உரங்கள் பல இருக்க
எங்களுக்கு மட்டும் ஏன்
கள்ளிப்பால் மட்டுமே
தெளித்தீர்?
வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம்
என்றார்களே,
அது என்ன
ஆண் மரங்களை
மட்டுந்தானா?
எங்களையும் வளரவிட்டுப்
பாருங்கள்,
நாங்கள், பூக்கள் சொரியும்
செடிகளாக,
நிழல் தரும் மரங்களாக,
காய், கனி நல்கும்
தோப்பாக மாறமுடியும்.
தாமாக எங்களை
முகரத்துனியாதீர்,
நாங்களாகவே உங்களைச் சுற்றி
நல்ல சுகந்தத்தை
அள்ளி வீசுவோம்.
அழகாக வளரவிட்டுப் பாருங்கள்
எங்களை,
பின் நீங்களும் அற்புதமாக வளர்வீர்கள்!!!!!!

யாதும் உருவே!!!

யாதும் உருவே!!!


தென்றலாய் வருடுவதா,
புயலாய் வீசுவதா?
அலையாய் தொடுவதா,
ஆழிப்பேரலையாய் அழிப்பதா?
நிலவாய் குளிர்விப்பதா,
சூரியனாய் சுட்டெரிப்பதா?
மயில் இறகாய் வருடுவதா,
தேளின் கொடுக்காய் கொட்டுவதா?
பூவாய் மனம் வீசுவதா,
முட்களாய் குத்துவதா?
தேனாய் இனிப்பதா,
எட்டிக்காயாய் கசப்பதா?
தீபமாய் ஒளிவீசுவதா,
மின்னலாய் குருடாக்குவதா?
புல்லாங்குழலாய் இசைப்பதா,
போர் முரசாய் முழங்குவதா?
ஆல விழுதாய் தாங்குவதா,
பாசக்கயிறாய் இறுக்குவதா?
குழந்தையாய் கொஞ்சுவதா,
ராட்சசியாய் மிஞ்சுவதா?
காளியாய் மாறுவதா,
காமாட்ச்சியாய் காட்சியளிப்பதா?
எல்லாம் உங்கள் கையில்.......