Sunday, August 12, 2018

கலைஞர் வாழ்த்து மடல்

வள்ளுவனை நாங்கள்
கண் கொண்டு கண்டதில்லை!
நீயே வள்ளுவனாய் 
எங்களுக்கு காட்சியளித்தாய்!
வள்ளுவனும் உன்னுருவில்
மறுபிறவி எடுத்தானோ ?
தமிழாண்ட வள்ளுவனுக்கோர்
கோட்டைக் கட்டி
அழகு பார்த்தாய்!
எம்மொழியை செம்மொழி ஆக்கினாய்!
ஊனமுற்றோர் என்ற ஓர்வார்த்தை அகற்றி
மாற்று திறனாளிகளாய்
மறுபிறவியளித்தாய்!
பிறப்பால் எப்பால் என்று குழம்பியவருக்கு
திருநங்கை என்று பெயர் சூட்டி
மதிப்பளித்தாய்!
தமிழ்மொழியும் வள்ளுவனும்
வாழும் நாள் வரை
நீயும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டே இருப்பாய்!!

No comments: