Monday, May 23, 2016

வடிவழகி!!

வடிவழகி!!

முதலில் நீல வண்ண ஆடை,
அதை ரசித்து நான் முடிக்கவில்லை அதற்குள்,
நீலமும் மஞ்சளும் கலந்த பட்டாடை!
கண்கள் அக்காட்சியை பார்த்து கிரகிக்கு முன்,
தக தக என ஜொலிக்கும் தங்க நிற ஆடை,
மனம் இதில் மயங்கி கிடக்கும் வேளை
தீடீரென்று வந்தாள்
செம்மஞ்சளும் சாம்பலும் கலந்த புதிய வடிவில்,
இவ்வழகை கண்டு களிக்கும் நொடிக்குள்
மாறிவிட்டாள் மின்மினி பூச்சுக்கள்
பதித்த கருநிற ஆடைக்கு!
எத்துனை வடிவில் உலா வருகிறாள்
இந்த வடிவழகி?
வான மங்கைக்கு
மட்டும் அலுக்கவே அலுக்காதா
இத்தனை ஆடைகளை
ஒரே நாளில் மாற்ற?

1 comment:

Anamika said...

மிக்க நன்று